Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் உரை! – என்ன பேசப்போகிறார்?

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (08:43 IST)
பிரதமர் மோடி இன்று காலை 9 மணியளவில் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்துவது மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பிரதமர் மோடி இந்தியாவில் கொரோனா நிலவரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதில் பேசலாம் என்றும், மேலும் வேறு சில புதிய அறிவிப்புகளும் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments