Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐநா சபை அமைப்பையே மாத்தணும்! – பிரதமர் மோடி கருத்து!

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (09:17 IST)
ஐ.நா சபையின் 75வது ஆண்டு விழாவில் காணொளி மூலம் பேசிய பிரதமர் மோடி ஐநா சபை கட்டமைப்புகளில் மாற்றங்கள் தேவை என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 75வது ஆண்டு விழா காணொளி வழியாக நடைபெற்றது. அதில் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த பல தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில் பேசிய பிரதமர் மோடி ”கடந்த 75 வருடமாக ஐநா சபை பல்வேறு சாதனைகளை புரிந்திருந்தாலும் அதன் முக்கிய நோக்கம் இன்னும் பூர்த்தியாகவில்லை. ஐநா சபை தனது பழைய கட்டமைப்புகளை கொண்டு தற்போது உலக சூழலை கையாள முடியாது” என தெரிவித்துள்ளார்.

மேலும் “1945ல் உருவாக்கப்பட்ட ஐநா சபையில் மாற்றங்களுக்கான முன்னெடுப்பையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது” என அவர் தெரிவித்துள்ளார். ஐநா சபையில் இந்தியாவிற்கு நிரந்தர அந்தஸ்து வழங்க கோரி வரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த பேச்சு கவனம் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கள்ளக்காதலை கணவர் ஏற்கவில்லை.. மனவிரக்தியில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் தற்கொலை..!

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பதினான்கு பேர், தங்கம் மற்றும் வெள்ளி,பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

சிறிய அளவு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை: தவறி கீழே விழுந்த குடையால் பரபரப்பு..!

நான் மனிதன் அல்ல! பரமாத்மாவால் பூமிக்கு அனுப்பப்பட்டேன்! – பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments