Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐநா சபை அமைப்பையே மாத்தணும்! – பிரதமர் மோடி கருத்து!

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (09:17 IST)
ஐ.நா சபையின் 75வது ஆண்டு விழாவில் காணொளி மூலம் பேசிய பிரதமர் மோடி ஐநா சபை கட்டமைப்புகளில் மாற்றங்கள் தேவை என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 75வது ஆண்டு விழா காணொளி வழியாக நடைபெற்றது. அதில் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த பல தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில் பேசிய பிரதமர் மோடி ”கடந்த 75 வருடமாக ஐநா சபை பல்வேறு சாதனைகளை புரிந்திருந்தாலும் அதன் முக்கிய நோக்கம் இன்னும் பூர்த்தியாகவில்லை. ஐநா சபை தனது பழைய கட்டமைப்புகளை கொண்டு தற்போது உலக சூழலை கையாள முடியாது” என தெரிவித்துள்ளார்.

மேலும் “1945ல் உருவாக்கப்பட்ட ஐநா சபையில் மாற்றங்களுக்கான முன்னெடுப்பையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது” என அவர் தெரிவித்துள்ளார். ஐநா சபையில் இந்தியாவிற்கு நிரந்தர அந்தஸ்து வழங்க கோரி வரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த பேச்சு கவனம் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments