Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய முஸ்லிம்களின் நாட்டுப் பற்று குறித்துக் கேள்வி எழுப்பக் கூடாது - நரேந்திர மோடி

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (17:27 IST)
இந்திய முஸ்லிம்களின் நாட்டுப் பற்று குறித்துக் கேள்வி எழுப்பக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 
சர்வதேச தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று அவர் அளித்த பேட்டியில், இந்திய இஸ்லாமியர்கள் நாட்டிற்காக வாழவும் சாகவும் தயாராக இருப்பதாகக் கூறினார்.
 
அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளின் கருத்துகளுக்கு இந்திய முஸ்லிம்கள் பணிந்து செயல்படுவது என்பது நிஜமாகாது என்று அவர் கருத்துரைத்தார்.
 
இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவுகள் மேம்படும் என்று கூறிய அவர், இம்மாதம் இறுதியில் தாம் மேற்கொள்ளும் அமெரிக்கப் பயணத்தின்போது, இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 
மோடியின் இந்தப் பேச்சுக்கு முஸ்லீம் தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments