காங்கிரஸ் இல்லைனா வாரிசு அரசியல் இல்ல..! – பிரதமர் மோடி பேச்சு!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (15:33 IST)
இந்தியாவில் காங்கிரஸ் இல்லையென்றால் வாரிசு அரசியல் இருந்திருக்காது என பிரதமர் மோடி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பட்ஜெட் மீதான பல்வேறு விவாதங்களும், பிற நிகழ்வுகள் குறித்த உரையாடல்களும் நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் “வாரிசு அரசியலால் மற்றவர் திறமை புறக்கணிக்கப்படுகிறது. காங்கிரஸ் இல்லையென்றால் வாரிசு அரசியல் இருந்திருக்காது, ஊழல் இருந்திருக்காது” என்று பேசியுள்ளார்,

மேலும் “நம் நாட்டு மக்கள் கொரோனா  பிரச்னையை திறம்பட எதிர்கொண்டுள்ளனர். சில தலைவர்கள் தங்கள் தொகுதியைக் கூட கவனிப்பதில்லை. எதிர்க்கட்சியான பிறகு நாட்டை பற்றிக் கவலைப்பட வேண்டாம் என சிலர் செயல்படுகின்றனர்” என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

19 வயது இளைஞர் வேகமாக ஓட்டிய கார் மோதி கர்ப்பிணி மரணம்.. வயிற்றில் இருந்த குழந்தையும் பலி..!

காதலிக்க மறுத்த 12ஆம்வகுப்பு மாணவியை குத்தி கொலை செய்த இளைஞர்.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

பழைய, சிப் இல்லாத சாதாரண பாஸ்போர்ட்டுகள் எதுவரை செல்லும்: அதிகாரிகள் விளக்கம்..!

மதுரைக்கும், கோவைக்கும் "NO METRO".. மத்திய அரசுக்கு முக ஸ்டாலின் கண்டனம்..!

வாக்குச்சாவடி அலுவலர்களின் ஊதியம் அதிரடி உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments