Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் இல்லைனா வாரிசு அரசியல் இல்ல..! – பிரதமர் மோடி பேச்சு!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (15:33 IST)
இந்தியாவில் காங்கிரஸ் இல்லையென்றால் வாரிசு அரசியல் இருந்திருக்காது என பிரதமர் மோடி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பட்ஜெட் மீதான பல்வேறு விவாதங்களும், பிற நிகழ்வுகள் குறித்த உரையாடல்களும் நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் “வாரிசு அரசியலால் மற்றவர் திறமை புறக்கணிக்கப்படுகிறது. காங்கிரஸ் இல்லையென்றால் வாரிசு அரசியல் இருந்திருக்காது, ஊழல் இருந்திருக்காது” என்று பேசியுள்ளார்,

மேலும் “நம் நாட்டு மக்கள் கொரோனா  பிரச்னையை திறம்பட எதிர்கொண்டுள்ளனர். சில தலைவர்கள் தங்கள் தொகுதியைக் கூட கவனிப்பதில்லை. எதிர்க்கட்சியான பிறகு நாட்டை பற்றிக் கவலைப்பட வேண்டாம் என சிலர் செயல்படுகின்றனர்” என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டுமுயற்சியில் ஒருங்கிணையும் ஜெமினி எடிபில்ஸ் & பேட்ஸ்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு.. விஜய் வெளியிட்ட 2 பக்க அறிக்கை..!

அலங்கார பொம்மைகளாக இருப்பதில் என்ன பயன்? - தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தவெக விஜய் எடுத்த முடிவு!

பெண்கள் சிறைச்சாலையின் மேல் ட்ரோன் பறந்ததை அடுத்து, கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரயில்வே தேர்வில் மோசடி.. 26 பேர் கைது.. ஒரு கோடி பணம் கைமாறியதா?

அடுத்த கட்டுரையில்
Show comments