Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

Siva
ஞாயிறு, 19 மே 2024 (09:14 IST)
இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி சர்வதேச நாணய நிதியிடம் பிச்சை பாத்திரத்தை ஏந்தி வருகிறது என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்தியா அபரிதமான வளர்ச்சியை பெற்று வருகிறது என்றும் ஆனால் பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து சர்வதேச நாணய நிதியம் வழங்கிய கடன் உதவிகள் மூலம் மெல்ல மெல்ல மீண்டும் வந்தாலும் இன்னும் அந்நாடு பிச்சை பாத்திரம் ஏந்தி வருகிறது என்றும் கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவுக்கு தொல்லை அளிப்பதையே பாகிஸ்தான் முக்கிய வேலையாக கொண்டிருந்தது என்றும் அதனால் தான் தற்போது அதன் கையால் பிச்சை பாத்திரம் இருக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். 
 
இந்தியாவில் வலுவான அரச அமையும் போது எதிரிகள் நடுங்குவார்கள் என்றும் நாட்டிற்கு எதிரான ஆபத்தான செயல்களில் ஈடுபட தயங்குவார்கள் என்றும் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். 
 
தேசத்துக்கு எதிரானவர்களை ஒவ்வொரு இந்தியர்களும் அறிவார்கள் என்றும் ஒவ்வொரு இல்லத்திலும் மீண்டும் மோடி ஆட்சி என்ற குரல் ஒலித்து வருகிறது என்றும் அவர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments