Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூர் மகள்களுக்கு ஏற்பட்டதை மன்னிக்க முடியாது: ஒரு குற்றாவளியும் தப்பிக்க முடியாது: பிரதமர் மோடி..!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (12:32 IST)
மணிப்பூர் மகள்களுக்கு ஏற்பட்டதை மன்னிக்கவே முடியாது என்றும் எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது என்றும் பிரதமர் மோடி ஆவேசமாக கூறியுள்ளார். 
 
மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக பல ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது 
 
இந்த கொடூர சம்பவம் மூன்று மாதங்களுக்கு முன்னர் நடந்திருந்தாலும் மணிப்பூரில் இணையம் தடை செய்யப்பட்டிருந்ததால் தற்போது தான் இந்த வீடியோ வெளியாகி உள்ளது. 
 
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கூறிய பிரதமர் மோடி மணிப்பூரில் பெண்கள் அவமதிக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களையும் அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும் மணிப்பூர் மகள்களுக்கு ஏற்பட்டதை மன்னிக்கவே முடியாது என்றும் எந்த குற்றவாளிகளும் தப்ப மாட்டார்கள் என நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறியா?

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சை கேள்வி.. வினாத்தாள் தயாரித்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை..!

கோழியை காப்பாற்றி முதலையை ஏப்பம் விட்ட ஆனந்த் அம்பானி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்