Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்கட்ட வாக்குப்பதிவு: ஜனநாயக கடமையாற்ற தலைவர்கள் வேண்டுகோள்

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (07:30 IST)
91 மக்களவை தொகுதிகளிலும், ஆந்திரா, சிக்கிம், ஒடிசா, அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தொகுதிகளிலும் சற்றுமுன் வாக்குப்பதிவு ஆரம்பமானது. பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். 
 
ஆந்திராவில் 175 தொகுகளிலும், அருணாச்சல பிரதேசத்தில் 60வ்தொகுகளிலும், சிக்கிமில் 32 தொகுகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
 
இந்த நிலையில் இன்று தேர்தல் நடைபெறும் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றுமாறு தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அனைவரும் திரளாக வந்து வாக்களியுங்கள்; முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வலியுறுத்துவதாக பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேபோல் வாக்களிப்பது நமது கடமை; அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று நாக்பூர் மக்களவைத் தேர்தலில் வாக்களித்த பின் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி உள்பட பல அரசியல்கட்சி தலைவர்கள் வாக்காளர்கள் தங்கள் கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments