Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.25 கோடி லஞ்சம் வாங்கிய மோடி: ஆதாரத்துடன் புயலை கிளப்பும் கெஜ்ரிவால்!

ரூ.25 கோடி லஞ்சம் வாங்கிய மோடி: ஆதாரத்துடன் புயலை கிளப்பும் கெஜ்ரிவால்!

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (09:19 IST)
பிரதமர் நரேந்திர மோடி 2012-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தபோது  ஆதித்யா பிர்லா குழுமத்திடம் இருந்து ரூ.25 கோடி லஞ்சம் பெற்றதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.


 
 
டெல்லி சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் கெஜ்ரிவால் இந்திய வரலாற்றில் முதன் முறையாக ஒரு பிரதமரின் பெயர் கருப்பு பண விவகாரங்களில் வந்திருக்கிறது.
 
கடந்த 2013-ஆம் ஆண்டு ஆதித்யா பிர்லா குழுமத்தில் நடந்த வருமான வரி சோதனையின் போது ஒரு மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டது. அதில் மோடி லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரம் உள்ளது.
 
2012-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி குஜராத் முதல்வருக்கு 25 கோடி கொடுத்ததாக வெளிப்படையான பதிவு அந்த மடிகணினியில் உள்ளது. அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்தது மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இது பற்றி வாய் திறக்கவில்லை. எனவே இவர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இவரின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இது புயலை கிளப்பும்.

 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments