Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படேல் சிலையை காண நீர் விமான சேவை! – இன்று தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (08:51 IST)
சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளான இன்று அவரது சிலையை காண வரும் பயணிகளுக்கு நீர்வழி விமான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

சர்தார் வல்லபாய் படேல் இந்திய சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியவர். அவரை போற்றும் வகையில் கடந்த ஆண்டில் குஜராத்தில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டது. “ஒற்றுமையின் சிலை” என பெயரிடப்பட்டுள்ள அந்த சிலையை காண ஆண்டுதோறும் நாடு முழுவதிலிருந்தும் பலர் வந்து செல்கின்றனர்.

இன்று படேலின் பிறந்தநாளையொட்டி குஜராத்தில் உள்ள ஒற்றுமையின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் வீரர்கள் நடத்தும் அணிவகுப்பில் பங்கேற்கிறார். பிறகு படேல் சிலையை பார்க்க வரும் பயணிகளுக்கான நீர்வழி விமான போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் படேல் சிலை சுற்றுலாவுக்கான சிறந்த பகுதியாக அமையும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் சிக்கினால் கல்வி சான்றிதழ் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு..!

16 வயது பள்ளி மாணவி கர்ப்பம்.. குழந்தை பிறந்த போது பலியான பரிதாபம்.. பெற்றோர் அதிர்ச்சி..!

வெளிநாட்டினர் வீடு வாங்க தடை.. ஆஸ்திரேலிய அரசு அதிரடி உத்தரவு..!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு.. கூட்டணிக்கு மிரட்டலா?

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments