Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி
, செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (11:11 IST)
அயர்லாந்து, அமெரிக்கா சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர்  நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார்


 
 
அயர்லாந்து, அமெரிக்கா நாடுகளில் 7 நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. பொது சபையில் உரையாற்றினார்.
 
அமெரிக்க சுற்றுப் பயணத்தின்போது, முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்த நரேந்திர மோடி, அதிபர் ஒபாமாவிடம் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
 
இந்த பயணத்தின்போது, தீவிரவாதப் பிரச்சனை, ஐ.நா. பாதுகாப்பு குழுவில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய கோரிக்கைகளை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிடம் பிரதமர் வலியுறுத்தினார்.
 
இந்நிலையில்  அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil