Webdunia - Bharat's app for daily news and videos

Install App

140 கோடி மக்களின் நம்பிக்கைதான் எனது கவசம்! – ராகுல்காந்திக்கு பிரதமர் மோடி பதிலடி?

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (09:14 IST)
அதானி விவகாரத்தில் பிரதமர் மோடியை தொடர்புபடுத்தி ராகுல்காந்தி பேசிய நிலையில் அதற்கு பதில் தரும் வகையில் மக்களவையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

சமீபத்தில் அதானி பங்குசந்தையில் முறைகேடு செய்ததாக ஹிண்டென்பெர்க் அறிக்கை வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்பு படுத்தி நேற்று நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து ராகுல்காந்தி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்கு பாஜக எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்ததால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு எழுந்தது.

இந்நிலையில் மக்களவை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ராகுல்காந்தியின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக பேசினார். அதில் அவர் “என் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை என்பது வெறும் செய்தித்தாள் தலைப்புகள், தொலைக்காட்சி செய்திகள் மூலமாக வந்தது இல்லை. மக்கள் சேவையில் பல ஆண்டுகளாக நான் அர்ப்பணிப்புடன் இருப்பதன் வாயிலாக வந்தது. நான் 140 கோடி மக்களின் நம்பிக்கை என்ற கவசத்தை அணிந்துள்ளேன். அதை எதிர்கட்சிகளின் பொய்களால் உடைக்க முடியாது” என பேசியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

வெள்ளை மாளிகையில் ஒரு கோமாளி தலைவராக இருக்கிறார்: ஒவைசி கடும் விமர்சனம்..!

முதல்முறையாக அந்தமானில் அமலாக்கத்துறை ரெய்டு.. ரூ.200 கோடி மோசடி கண்டுபிடிப்பு..!

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments