Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தமான் தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர்! – பிரதமர் மோடி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (09:35 IST)
இன்று நேதாஜியின் பிறந்தநாள் பாராக்கிரம தினமாக (Parakram Diwas) கொண்டாடப்படும் நிலையில் அந்தமான் தீவுகளுக்கு ராணுவ வீரர்கள் பெயர் சூட்டப்பட உள்ளது.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று (ஜனவரி 23) பாராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இன்று பராக்கிரம தினத்தை சிறப்பிக்கும் விதமாக இந்திய நாட்டிற்காக போராடி இன்னுயிர் ஈந்த பரம்வீர் சக்ரா விருதை பெற்ற ராணுவ வீரர்களின் பெயரை அந்தமானை சுற்றியுள்ள பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு சூட்ட உள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மேஜர் சோம்நாத் ஷர்மா, நாயக் ஜதுநாத் சிங், பிரு சிங், ஆல்பெர்ட் எக்கா, கேப்டன் விக்ரம் பத்ரா, மனோஜ் குமார் பாண்டே உள்ளிட்ட பல வீரர்களின் பெயர்கள் 21 தீவுகளுக்கு இன்று பிரதமர் மோடியால் சூட்டப்படுகின்றன.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது ஏன்? பிரேமலதா விளக்கம்..!

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

காவல்துறையை நிர்வகிக்க தெரியாத பொம்மை முதல்வர்: சிவகங்கை கஸ்டடி மரணம் குறித்து ஈபிஎஸ்..!

திமுக ஆட்சியில் கஸ்டடி மரணங்களை பெரிய பட்டியலே போடலாம்! - தவெக கண்டன அறிக்கை!

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

அடுத்த கட்டுரையில்
Show comments