நவீனின் பெற்றோருக்கு பிரதமர் மோடி ஆறுதல்

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (18:03 IST)
ரஷ்யா நடத்திய தாக்குதலில் கர்நாடகாவை சேர்ந்த மாணவர் நவீனின் பெற்றோருக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். 

 
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 7 நாட்களாக போர் தொடர்ந்து வருகிறது. இதனால் உக்ரைனிலிருந்து பல நாட்டு மக்களும் எல்லைகள் வழியாக அண்டை நாடுகள் சென்று சொந்த நாடுகளுக்கு தப்பி வருகின்றனர்.
 
போரை நிறுத்தும் நோக்கில் நேற்று பெலாரஸில் நடந்த உக்ரைன் – ரஷ்யா பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவுகள் எடுக்கப்படவில்லை. இதனால் ரஷ்யா, உக்ரைனின் பகுதிகளில் தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளது. இன்று கார்க்கிவ் பகுதியில் காலை ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த மாணவர் பலியாகியுள்ளார். 
 
அவர் கர்நாடகாவை சேர்ந்த நவீன் என்ற மாணவர் என மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. உக்ரைன் போரில் இந்திய மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மாணவர் நவீன் சேகரப்பாவின் குடும்பத்தினருக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
மேலும், கர்நாடகாவை சேர்ந்த மாணவர் நவீனின் பெற்றோருக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். நவீனின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லிவ் இன் உறவில் இருந்த காதல் ஜோடி மர்ம மரணம்.. 2 நாள் கழித்து சடலங்கள் மீட்பு..!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.2400 குறைவு..!

முதலாளி மீதுள்ள கோபத்தால் 5 வயது சிறுவனை கொலை செய்த டிரைவர்.. ஒரு கொடூர சம்பவம்..!

விமானத்தில் 11 பீர் குடித்துவிட்டு இருக்கையில் சிறுநீர் கழித்த இளைஞர்.. ரூ.4 கோடி சம்பாதிக்கும் ஐடி ஊழியரின் அநாகரீக செயல்..!

9 மாத குழந்தையுடன் பனி படர்ந்த சிகரத்தில் ஏறியதல் விபரீதம்: பெற்றோரின் பொறுப்பற்ற செயலுக்கு கண்டிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments