சர்வதேச யோகா தினம்; அதிகாலையே யோகா செய்த பிரதமர் மோடி!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (09:22 IST)
இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி மைசூரு அரண்மனையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

உலகம் முழுவதும் ஜூன் 21ம் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தொடங்கிய யோகா உடற்பயிற்சி முறை தற்போது பல நாடுகளிலும் மக்களால் பின்பற்றப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக யோகா தினம் பிரம்மாண்டமாக நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் யோகா தினம் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. மைசூரு அரண்மனையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டார்.

அப்போது பேசிய அவர் “யோகா பயிற்சி உடல், மனம் இரண்டிற்கும் அமைதியை தருகிறது. சீராக வைத்திருக்க உதவுகிறது. உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் யோகா செய்வதன் மூலம் உலகளாவிய அமைத்திக்கான சூழலை உருவாக்கியுள்ளார்கள்.
யோகா பயிற்சியால்தான் மக்களையும், நாடுகளையும் ஒன்றிணைக்க முடியும். இந்த முழு பிரபஞ்சமும் நமது உடல் மற்றும் ஆன்மாவிலிருந்து தொடங்குகிறது. யோகா செய்வதன் மூலம் நமக்கு இருக்கும் அனைத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உட்பட 28 மாவட்டங்களில் கனமழை.. இன்றிரவு ஜாக்கிரதை மக்களே..!

ஒரு கப் டீயை விட மொபைல் டேட்டா விலை குறைவு: டிஜிட்டல் வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி

'ராகுல் காந்தியை சந்திக்க விஜய்க்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை': கே.எஸ். அழகிரி விளக்கம்

15 தொகுதிகள் இல்லையென்றால் போட்டியிட மாட்டோம்: பீகார் NDA கூட்டணியை மிரட்டும் கட்சி..!

அமீபா நோயால் 9 வயது சிறுமி மரணம்.. கோபத்தில் டாக்டரை அரிவாளால் வெட்டிய தந்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments