Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா இப்போது நிலவில் உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (18:12 IST)
இந்தியா அனுப்பிய சந்திராயன் 3 விண்கலம் இன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 
 
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறிய பிரதமர் மோடி இந்தியா இப்போது நிலவில் இருக்கிறது என்று தெரிவித்தார். 
 
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள் என்றும் இந்தியா இன்று உலக அளவில் தலை நிமிர்ந்து நிற்கிறது என்றும் அவர் தெரிவித்தார் 
 
இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது என்று கூறிய பிரதமர் மோடி  இந்த பெருமை ஒவ்வொரு இந்தியருக்கும் உண்டு என்றும் அவர் தெரிவித்தார். 
 
தென்னாப்பிரிக்காவில் நான் இருந்தாலும் எனது எண்ணம் முழுவதும் சந்திராயன் 3 தரை இறங்குவதில் தான் இருந்தது என்றும்  அவர் கூறினார்.  நமது கண் முன்னே இந்தியா வல்லரசாகி உள்ளது என்று கூறிய பிரதமர் மோடி  இந்த சாதனையை படைக்க உதவிய ஒவ்வொரு இந்தியருக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments