Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்? – முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (08:41 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

மற்ற மாநிலங்களிலும் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிவதை அவசியம் ஆக்கும்படி மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின் மேலும் சில முக்கிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments