Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திட்டக் குழுவுக்கு மாற்று அமைப்பு ஏற்படுத்த, மக்கள் கருத்துகள் வரவேற்பு

Webdunia
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (19:17 IST)
திட்டக் குழுவிற்கு மாற்றாக ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார். அதன்படி, இந்தப் புதிய அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும், அதன் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
 
இதற்கான அறிவிப்பை பிரதமர் வெளியிட்டுள்ளார். இதற்காக http://mygov.nic.in என்ற வலைத்தளத்தில் சுதந்திரமான கருத்துக் களம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் தங்களது கருத்துகளைப் பதிவுசெய்யலாம்.
 
"ஒரு புது அமைப்பை உருவாக்க உள்ளோம். அது 21ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தியாவின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று நம்புகிறோம். மேலும், அது மாநிலங்களின் பங்களிப்பை வலுப்படுத்தும். கருத்துகள் வந்து குவியட்டும்" என்று பிரதமர் கூறியுள்ளார். 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments