Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (14:08 IST)
நடப்பு கல்வி ஆண்டுக்கான JEE மற்றும் நீட் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி 11 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என 11 மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 
 
இந்த மனுக்கள் மீது கடந்த சில நாட்களாக விசாரணை செய்யப்பட்ட நிலையில் விசாரணை முடிந்து இன்று நீதிபதிகள் 11 மாணவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.
 
மேலும் வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்திவிட முடியாது என்றும், அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுடன் நகர்ந்துதான் ஆக வேண்டும் என்றும், ஓராண்டு இழப்பதற்கு மாணவர்கள் தயாராக உள்ளனரா? என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். 
 
தேர்வு நடத்தும் முடிவில் தலையிடுவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்து விடும் எனக் கூறிய நீதிபதிகள், மத்திய அரசு தேர்வுகளை பாதுகாப்பாகவும், தற்காப்பு நடவடிக்கைகளுடன் நடத்துவோம் என்று உறுதி அளிருப்பதால் தேர்வுக்கு தடைகோரிய மனுக்களை தள்ளுபடி செய்கிறோம் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments