Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா மோசமான நிலையை நோக்கி செல்கிறது: முதல்வர் பினராயி விஜயன்

Webdunia
புதன், 5 மே 2021 (20:10 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பில் கேரளா மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா பரவலில் கேரளா மோசமான நிலையை நோக்கி செல்வதாகவும் பாதிப்பு விகிதம் குறையவில்லை என்றும் இந்த சூழலில் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க வழிவகுத்தது என்றும் கேரள முதல்வர் தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 441,953 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இது கிட்டத்தட்ட தமிழகத்தின் பாதிப்பை விட இரு மடங்கிற்கும் மேல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் கேரளாவில் இன்று ஒரே நாளில் 58 பேர் உயிரிழந்ததாகவும் 23,106 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கேரளாவில் கட்டுக்கடங்காமல் இரண்டாவது அலை வீசி வருவதை அடுத்து விரைவில் முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments