தானாக ஓடிய ரயில் என்ஜினை பைக்கில் துரத்திச் சென்று நிறுத்திய ஓட்டுநர்

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (18:31 IST)
ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில் என்ஜின் ஓட்டுநர் இல்லாமல் ஓடியதை சினிமாவில் வருவது போல் பைக்கில் துரத்திச் சென்று ஓட்டுநர் ஒருவர் நிறுத்தியுள்ளார்.


 

 
கர்நாடக மாநிலம் கல்பர்கி மாவட்டத்தில் வடி ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு நேற்று பிற்பகல் சென்னை-மும்பை செல்லும் ரயில் வந்தது. ரயில் நிலைத்தில் எலக்ட்ரிக் என்ஜின் அகற்றப்பட்டு டீசல் என்ஜின் இணைக்கப்பட்டது. 
 
நிறுத்தி வைப்பட்டு இருந்த எலக்ட்ரிக் என்ஜின் தானாக ஓடத்துவங்கியது. இதை சற்றும் எதிர்பார்க்காத ரயில்வே அதிகாரிகள், ரயிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டனர். விபத்து ஏற்படாமல் இருக்க என்ஜின் ஓடிய ரயில் பாதையில் சிக்னல்கள் ஒழுங்குபடுத்தப்பட்டது. 
 
அடுத்தடுத்து இருந்த ரயில் நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. ரயில்வே அதிகாரி ஒருவர் சினிமாவில் வருவது ரயில் என்ஜினை பைக்கில் துரத்திச் சென்றார். ஒருவழியாக வேகம் குறைந்தது. இதையடுத்து அவர் என்ஜினை தாவிப்பிடித்து நிறுத்தினார். 
 
ஓட்டுநர் இல்லாமல் ரயில் என்ஜின் 13 கி.மீ தூரம் ஓடியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு ரூ.20 லட்சம் அனுப்பிய விஜய்.. விரைவில் சந்திப்போம் என கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments