Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரவல் எதிரொலி: முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (19:26 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரனோ இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் முதுகலை மருத்துவ பட்டப் படிப்பிற்கான நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என அரசியல்வாதிகள் பலர் கோரிக்கை விடுத்தனர். மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சிபிஎஸ்சி தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது போல் முதுகலை மருத்துவ நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் இந்த கோரிக்கைகளை பரிசீலித்த மத்திய அரசு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முதுகலை நீட் தேர்வை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது
 
கொரோனா காரணமாக வரும் 18ம் தேதி நடைபெற இருந்த முதுகலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் அறிவிப்புச் செய்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து தற்போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments