Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு?? – இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (15:35 IST)
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மெல்ல உயர்வை சந்தித்து வந்த நிலையில் அதிகபட்சமாக ரூ.110 ஐ தாண்டியது. பின்னர் பெட்ரோல் டீசல் மீதான வரிகள் குறைக்கப்பட்ட நிலையில் விலை சற்று குறைந்தது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40க்கும், டீசல் ரூ.91.43க்கும் விற்கப்படுகிறது.

இந்நிலையில் உக்ரைன் போரால் உலக அளவில் கச்சா எண்ணெய் பேரல் விலை வேகமாக அதிகரித்து 139 டாலராக உள்ளது. ஆனாலும் இந்தியாவில் 5 மாநில தேர்தலை கருத்தில் கொண்டு விலை ஏற்றம் இல்லாமல் பெட்ரோல், டீசல் விற்பனையாகி வருகிறது.

தற்போது தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.6 வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் ஒரேயடியாக அறிவிக்காமல் நாளொன்றுக்கு 50 காசுகள் என மெல்ல அதிகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments