Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை உயர்வு - எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

Webdunia
புதன், 1 ஜூன் 2016 (10:47 IST)
பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.58 ரூபாயும், டீசல் விலை 2.26 ரூபாயும் உயர்த்தப்பட உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.


 

 
பெட்ரோல், டீசல் விலைகளை சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகிய நிலவரங்களுக்கு ஏற்ப நிர்ணயிக்கும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
இதைத் தொடர்ந்து மாதந்தோறும் 1 மற்றும் 16 ஆம் தேதிகளில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
 
அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 2.58 -ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.26 -ம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
 
இந்த விலை உயர்வுக்கு, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விலையை குறைக்கும் போது காசுகளாக குறைப்பதும், அதிகரிக்கும் போது மட்டும் ரூபாய் அளவில் உயர்த்துவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 
 
ஒரே மாதத்தில் பெட்ரோல் விலை ரூ.4.47 காசுகளும், டீசல் விலை ரூ.6.46 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments