Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு; கேரளாவில் 12 மணி நேர பந்த்!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (10:30 IST)
இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் கேரளாவில் 12 மணி நேர முழு அடைப்பு நடைபெற்றுள்ளது.

இந்தியா முழுவதும் சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை வேகமாக விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை பல இடங்களில் லிட்டருக்கு ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் வ்லையை தொடர்ந்து கேஸ் சிலிண்டர் விலையும் உயர்வை சந்தித்துள்ளது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் பல்வேறு தொழிற்சங்கங்கள் 12 மணி நேர பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்தன. இந்நிலையில் தொழிற்சங்கங்களின் அழைப்பை ஏற்று தனியார் பேருந்துகள் உள்ளிட்டவையும் கேரளாவில் பந்த்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் போக்குவரத்து சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments