Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (16:33 IST)
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரத்திற்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.


 

 
அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.38 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் டீசல் விலை ரூ.2.67 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
 
கடந்த ஆகஸ்ட் 1–ந் தேதி, பெட்ரோல் விலை 89 காசுகளும், டீசல் விலை 49 காசுகளும் குறைக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 15ம் தேதி பெட்ரோல் விலை ரூ.2¼ குறைக்கப்பட்டது. அதுபோல், டீசல் விலை 42 காசு குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

நாளை கூடுகிறது பாராளுமன்றம்.. டிரம்ப், வங்கமொழி மக்கள் வெளியேற்றம்.. பீகார் தேர்தல் பிரச்சனையை எழும்புமா?

இன்று முதல் 3 நாட்களுக்கு செம மழை! எந்தெந்த பகுதிகளில்..? - வானிலை ஆய்வு மையம்!

50 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை.. திருச்செந்தூர் பக்தர்கள் மகிழ்ச்சி..!

ஊட்டியில் இன்றும் நாளையும் சுற்றுலா தலங்கள் மூடல்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments