Webdunia - Bharat's app for daily news and videos

Install App

663 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் குறைப்பு.. தேர்தல் காரணமா?

Siva
வெள்ளி, 15 மார்ச் 2024 (07:45 IST)
இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது திடீரென பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமான அளவில் குறைக்கப்பட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்த போது கூட இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படவில்லை என்றும் இதனால் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் லாபத்தை பெற்று வந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. 

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று திடீரென பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இன்று முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.1. 88 குறைக்கப்பட்டு ரூபாய் 100.75 என்ற விலையில் விற்பனை ஆகிறது. அதேபோல் டீசல் விலை 1.90 காசுகள் குறைக்கப்பட்டு ரூபாய் 92.34 என விற்பனை ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்புக்கு தேர்தல் காரணம் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கத்தியால் கிழித்தனர், எலும்பு முறிவுகளும் ஏற்பட்டது: கரூர் துயர சம்பவத்தை நேரில் கண்ட பெண்மணி வாக்குமூலம்

இளம்பெண்ணை கற்பழித்த காவலர்கள்.. இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும். ஈபிஎஸ்

அக்டோபர் 3, வெள்ளிக்கிழமையும் பொது விடுமுறையா? தமிழக அரசு பரிசீலனை..!

ஆர்சிபி அணி விற்பனைக்கு வருகிறதா? ஐபிஎல் அரங்கில் பெரும் பரபரப்பு!

ரூ.35 கோடி மதிப்புள்ள போதைபொருளுடன் பிரபல நடிகர் கைது.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments