Webdunia - Bharat's app for daily news and videos

Install App

663 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் குறைப்பு.. தேர்தல் காரணமா?

Siva
வெள்ளி, 15 மார்ச் 2024 (07:45 IST)
இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது திடீரென பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமான அளவில் குறைக்கப்பட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்த போது கூட இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படவில்லை என்றும் இதனால் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் லாபத்தை பெற்று வந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. 

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று திடீரென பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இன்று முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.1. 88 குறைக்கப்பட்டு ரூபாய் 100.75 என்ற விலையில் விற்பனை ஆகிறது. அதேபோல் டீசல் விலை 1.90 காசுகள் குறைக்கப்பட்டு ரூபாய் 92.34 என விற்பனை ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்புக்கு தேர்தல் காரணம் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments