Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிஎஸ்டி வரியால் மக்கள் மகிழ்ச்சி; பிரதமர் மோடியின் வானொலி உரை

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2017 (15:28 IST)
ஜிஎஸ்டி வரியால பொருட்களின் விலை குறைந்துள்ளது என பொதுமக்கள் பாராட்டி தொடர்ச்சியாக கடிதங்களை அனுப்பி வருகிறார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


 

 
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மான் கி பாத் என்ற தலைப்பில் வானொலியில் உரை நிகழ்த்தி வருகிறார். இன்று அவர் வெள்ளம் மற்றும் ஜிஎஸ்டி குறித்து உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:-
 
இம்முறை பருவ மழை மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. ஆனால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தோம். 
 
நாட்டில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்து ஒருமாதம் ஆகிறது. ஜிஎஸ்டி தொடர்பாக அதிகமான பதில்கள் பெறப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டியை பாராட்டி தொடர்ச்சியாக பொதுமக்கள் கடிதங்களை அனுப்பி வருகின்றனர். அன்றாட பயன்படுத்தக்கூடிய பொருட்களின் விலை குறைந்துள்ளது என்பது தொடர்பாக ஏழை ஒருவர் எழுதிய கடிதத்தை பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்தேன் என்றார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments