இன்று முதல் நாடாளுமன்ற கூட்டம்.. வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேறுமா?

Siva
திங்கள், 25 நவம்பர் 2024 (07:23 IST)
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், வக்பு வாரிய திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 
அதேபோல், மணிப்பூர் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளதால், நாடாளுமன்றம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
மத்திய அரசு இந்த கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற குறிப்பாக வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்ற கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
அதுமட்டுமின்றி, அதானி குழுமம் லஞ்ச புகார் குறித்து விசாரணை செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
மணிப்பூர் வன்முறை மற்றும் மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டிய நிதியுதவி போன்ற பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
 
எனவே, இந்த குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments