Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
, திங்கள், 24 நவம்பர் 2014 (12:29 IST)
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
 
ஒரு மாத காலம் நடைபெற உள்ள நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனும், மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரியும் கூட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
 
இதைத் தொடர்ந்து, மக்களவையில் புதிய உறுப்பினர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி புதிய அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
 
நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் முரளி தியோராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
 
இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

Share this Story:

Follow Webdunia tamil