Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் சில நிமிடங்களில் நாடாளுமன்ற கூட்டம்: பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பிரதமர் மோடி!

Mahendran
திங்கள், 25 நவம்பர் 2024 (10:05 IST)
இன்னும் சில நிமிடங்களில் நாடாளுமன்ற கூட்டம் தொடங்கவிருக்கும் நிலையில் பத்திரிக்கையாளர்களை பிரதமர் மோடி சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று  மக்களவை மற்றும் மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடுகிறது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு பத்திரிக்கையாளர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார் 
 
இந்த சந்திப்பின்போது அவையை சுமூகமாக நடத்த எதிர்கட்சி எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆனால் நாடாளுமன்ற  அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த அதானி முறைகேடு விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது. 
 
எனவே நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சி எம்பிக்கள் ஸ்தம்பிக்க வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதானி முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments