Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்.. இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (11:29 IST)
அதானி விவகாரம் குறித்து விவாதம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் நான்காவது நாளாக இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அதானி விவகாரம் குறித்து விவாதம் செய்ய வேண்டும் என எதிர்கட்சி எம்பிகள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு அதற்கு ஒப்புக்கொள்ள அளிக்கவில்லை என்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஸ்தம்பித்து வருகின்றன. 
 
இந்த நிலையில் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கியதால் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சூறாவளி கிளம்பியதே..! மத்திய பாஜக அரசை கண்டித்து ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை!

அதிமுகவில் இணைந்த ராமநாதபுரம் இளைய மன்னர் ராஜா நாகேந்திர சேதுபதி.. ஈபிஎஸ் வரவேற்பு

அரிவாளால் வெட்ட முயன்ற சிறுவனை துப்பாக்கியால் சுட்ட உதவி ஆய்வாளர்.. நெல்லையில் பரபரப்பு..!

மாதம் 44 ஆயிரம் சம்பளம்..! ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு! - முழு விவரம்!

யார் கையிலயும் காசு இல்ல.. டிஜிட்டல் பே மூலம் பிச்சை! அப்டேட் ஆன பிச்சைக்காரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments