Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி விவகாரம்: 3 நிமிடங்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (12:06 IST)
ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் காரணமாக நாடாளுமன்றம் இன்று தொடங்கிய மூன்றே நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் காங்கிரஸ் எம்பி ஆக இருந்த ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இது குறித்து விவாதம் செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
அந்த வகையில் தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் குறிப்பு விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர். 
 
இதனை அடுத்து நாடாளுமன்றத்தில் இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய மூன்று நிமிடங்களில் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டுமே மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments