Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானி குழும விவகாரம்: எம்பிக்கள் கூச்சல் குழப்பத்தால் இரு அவைகளும் ஒத்திவைப்பு!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (13:56 IST)
அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிகள் கூச்சல் குழப்பம் செய்ததால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 
 
இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் தற்போது பாராளுமன்றத்தின் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சி எம்பிகள் அதானி குழும விவகாரம் தொடர்பாக விவாதம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்கள். இதனை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் மக்களவைஒத்திவைக்கப்பட்டது 
 
அதேபோல் மாநிலங்களவையிலும் அதானி குழும பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என எம்பிக்கள் முழக்கம் பட்டதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பம் மற்றும் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments