Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணத்துக்காக குழந்தையை விற்ற பெற்றோர்

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (11:08 IST)
உத்திர பிரதேச மாநிலத்தில் வாங்கிய கடனை அடைக்க 5 மாத குழந்தையை விற்ற பெற்றோர்கள் கைது செய்யப்பட்டனர்.


 

 
உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்த காலித், சாயிதா தம்பதியினர் தேநீர் கடை நடத்தி வருகின்றனர்.
 
இவர்கள் வட்டிக்கு ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளனர். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டனர். கடன் கொடுத்தவர் பணம் கேட்டு நெருக்கடி கொடுக்க தொடங்கினார்.
 
இதனால் அவர்களது 5 மாத குழந்தையை ரூ.16 லட்சத்துக்கு விற்று கடனை அடைத்தனர். இச்செய்தி வெளியே தெரிய கூடாது என்பதற்காக குழந்தை காணமல் போய்விட்டது என்று கூறியுள்ளனர்.
 
இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் செய்துள்ளனர். காவல் துறையினர் குழந்தையை கண்டுப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை பெற்றோர்களே விற்பனை செய்தது தெரிய வந்தது.
 
இதையடுத்து காவல் துறையினர் காலித், சாயிதா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments