Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணத்துக்காக குழந்தையை விற்ற பெற்றோர்

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (11:08 IST)
உத்திர பிரதேச மாநிலத்தில் வாங்கிய கடனை அடைக்க 5 மாத குழந்தையை விற்ற பெற்றோர்கள் கைது செய்யப்பட்டனர்.


 

 
உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்த காலித், சாயிதா தம்பதியினர் தேநீர் கடை நடத்தி வருகின்றனர்.
 
இவர்கள் வட்டிக்கு ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளனர். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டனர். கடன் கொடுத்தவர் பணம் கேட்டு நெருக்கடி கொடுக்க தொடங்கினார்.
 
இதனால் அவர்களது 5 மாத குழந்தையை ரூ.16 லட்சத்துக்கு விற்று கடனை அடைத்தனர். இச்செய்தி வெளியே தெரிய கூடாது என்பதற்காக குழந்தை காணமல் போய்விட்டது என்று கூறியுள்ளனர்.
 
இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் செய்துள்ளனர். காவல் துறையினர் குழந்தையை கண்டுப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை பெற்றோர்களே விற்பனை செய்தது தெரிய வந்தது.
 
இதையடுத்து காவல் துறையினர் காலித், சாயிதா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments