Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனக்கு வாக்களிக்காதவரின் வீட்டை இடிக்க முயற்சித்த பஞ்சாயத்து உறுப்பினர்

Webdunia
திங்கள், 4 ஜூலை 2016 (17:24 IST)
கர்நாடகாவில் நடைப்பெற்ற பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு வாக்களிக்காதவரின் வீட்டை இடிக்க முயற்சித்த பஞ்சாயத்து உறுப்பினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 

 
பெங்களூர் தேவனஹள்ளி அருகே சொன்னஹள்ளி கிராமத்தில் ரேனுகேஸ்வரா என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் அவர் புதிதாக கட்டும் வீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாயத்து உறுப்பினர் வெங்கடேஷ் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று வீட்டை சூறையாடியதாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து ரேனுகேஸ்வரா காவல் துறையில் புகார் அளித்து, காவல் துறையினர் வெங்கடேசுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
மேலும் ரேனுகேஸ்வரா மற்றும் அவரது மனைவி வெங்கடேசுக்கு வாக்களிக்காததால் இச்சம்பவம் நடைபெற்று உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையே வெங்கடேஷ், ரேனுகேஸ்வரா வீடு அரசுக்கு சொந்தமான இடம் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த வீடு கட்டப்படும் இடம் ரேனுகேஸ்வராவிற்கு சொந்தமானது என்பதற்கான ஆதராங்களை அவர் சமர்பித்து உள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments