Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டுப் போடலன்னா வீட்டை இடிப்போம் : பஞ்சாயத்து உறுப்பினர் அடாவடி

Webdunia
திங்கள், 4 ஜூலை 2016 (18:08 IST)
தனக்கு ஓட்டுப் போடாத குடும்பத்தினர் கட்டிய வீட்டை, பஞ்சாயத்து உறுப்பினர் இடிக்க முயன்ற சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் நிகழ்துள்ளது.


 

 
பெங்களூர் தேவனஹள்ளி அருகே உள்ள கிராமம் சொன்னஹள்ளி. அங்கு ரேனுகேஸ்வரா என்ற பெண் புதிதாக வீடுகட்டி வருகிறார். அப்போது அங்கு தீடிரென வந்த தனது ஆட்களுடன் வந்த அந்த பகுதி பஞ்சாயத்து தலைவர் வெங்கடேஷ், வீடுகட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அங்கிருந்த பொருட்களை சூறையாடியதோடு, அந்த வீட்டை இடிக்கவும் முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து ரேனுகேஸ்வரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
 
விசாரணையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வெங்கடேஷ், அங்கு சமீபத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு ரேனுகேஸ்வராவின் குடும்பம் வாக்களிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், அவரின் வீட்டை இடிக்க முயன்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
 
மேலும், அந்த இடம் அரசாங்கத்திற்கு சொந்தமானது என்று வெங்கடேஷ் கூறுகிறார். ஆனால், அந்த இடம் தனக்கு சொந்தாமனது, அதற்கான ஆதரங்கள் தன்னிடம் இருப்பதாக ரேனுகேஸ்வரா கூறியுள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments