Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்குள் எங்கு இடம்பெயர்ந்தாலும் மொபைல் எண்ணை மாற்றத் தேவையில்லை

Webdunia
வியாழன், 16 அக்டோபர் 2014 (14:12 IST)
இந்தியாவுக்குள் மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்ந்து வாழ்வோரின் வசதிக்காக மத்திய தொலைத் தொடர்புத்துறை ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
 
இனி மாநிலம் மாறினாலும் வாடிக்கையாளர்கள் தங்களின் தொடர்பு எண்ணை மாற்றத் தேவையில்லை. ஏற்கெனவே பயன்படுத்திய நம்பரையே பயன்படுத்திக் கொள்ளலாம். வரும் மார்ச் மாதம் 31 க்குள் இந்த வசதி நடைமுறைக்கு வரும்.
 
செல்போன் வாடிக்கையாளர்கள் பெருகி வரும் நிலையில், முழுமையான ‘மொபைல் நம்பர் போர்டபிலிட்டி’ வசதியை வழங்க தொலைத் தொடர்புத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் செய்துள்ள சிபாரிசை, தொலைத் தொடர்பு கமிஷன் ஏற்றுக்கொண்டுள்ளது.
 
செல்போன் வாடிக்கையாளர்கள் செல்போன் எண்ணை மாற்றிக்கொள்ளாமல் சேவை நிறுவனத்தை மாற்றிக்கொள்வது ஏற்கெனவே வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments