அடுத்தாண்டு வரை பான் - ஆதார் இணைக்க அவகாசம்!

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (16:10 IST)
பான் - ஆதார் எண் இணைப்புக்கு அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியது மத்திய அரசு. 
 
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசு 2019 மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது. 
 
பிறகு பல்வேறு காரணங்களால் ஆறு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கடைசியாக செப்டம்பர் 31க்குள் இணைக்க வேண்டும் என்ற கால அவகாசம் டிசம்பர் 31 ஆக நீட்டிக்கப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் ஒரு வாய்ப்பாக 2020 மார்ச் மாதம் இறுதி வரை கால அவகாசம் வழங்கியது மத்திய நிதி அமைச்சகம். 
 
இந்நிலையில், பான் - ஆதார் எண் இணைப்புக்கு அடுத்தாண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது மத்திய அரசு. கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் மேலும் அவகாசம் வழங்கியது மத்திய அரசு. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் ரகசிய டீலிங்கில் காங்கிரஸ்?!.. செல்வபெருந்தகை என்ன சொல்றார் பாருங்க!...

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள்.. டிசம்பர் 19-ஆம் தேதி திட்டம் தொடக்கம்..!

பாகிஸ்தானை அழிக்க உள்ளே புகுந்த TTP தீவிரவாதிகள்.. 24 பேர் கைது..!

மதுரை புதிய மேம்பாலத்திற்கு 'வீரமங்கை வேலுநாச்சியார்' பெயர்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அடுத்த வருஷமாவது தீபம் ஏத்துவோம்!... இயக்குனர் மோகன் ஜி ஃபீலிங்!...

அடுத்த கட்டுரையில்
Show comments