Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடங்காத பாகிஸ்தான்! அடக்குமா இந்தியா? எல்லையில் மீண்டும் அத்துமீறி தாக்குதல்

அடங்காத பாகிஸ்தான்! அடக்குமா இந்தியா? எல்லையில் மீண்டும் அத்துமீறி தாக்குதல்
, வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (13:02 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. 

 
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் இறங்கியுள்ளது.
 
அக்னூர் மாவட்டத்தில் பல்லன்வாலா, சப்ரியர், சம்னம் பகுதிகளை ஒட்டிய எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. 
 
அதிகாலை 12.30 மணிக்கு தொடங்கி 1.30 மணி வரை தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.
 
செப்டம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பது இது 5-வது முறையாகும். கடந்த 36 மணி நேரத்தில் மூன்றாவது முறையாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது என ஜம்மு துணை கமிஷனர் சிம்ரன்தீப் சிங் கூறினார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ம.ந.கூட்டணியில் பிளவு; திமுகவுடன் கூட்டணி? - என்ன சொல்கிறார் திருமாவளவன்