Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

Prasanth Karthick
வியாழன், 8 மே 2025 (17:16 IST)

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவின் 15 நகரங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் அழிக்கப்பட்டன. அதை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் நடத்திய தாக்குதலில் இதுவரை 3 பெண்கள் உட்பட 16 பேர் பலியாகியுள்ளனர். 

 

இந்நிலையில் பாகிஸ்தான் மீதான தாக்குதலை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தி வருகிறது. சீனாவிடமிருந்து பாகிஸ்தான் வாங்கி லாகூரில் வைத்திருந்த வான்வழி தாக்குதல் முறியடிப்பு அமைப்பை இந்திய ராணுவம் அழித்தது. 

 

இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் நடத்த முயன்ற தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் பீரங்கிகளை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் முறியடிக்கப்பட்ட நிலையில், பஞ்சாப் பகுதியில் ஏவப்பட்ட பாகிஸ்தான் ஏவுகணைகளை இந்திய வான்வெளி ஏவுகணை தடுப்பு அமைப்புகள் செயலிழக்க செய்துள்ளன.

 

இந்திய பாதுகாப்புத் துறை தகவலின்படி, ஜம்மு, ஸ்ரீநகர், பதன்கோட், ஜலந்தர், லூதியானா, சண்டிகார், ஆதம்பூர் உள்ளிட்ட 15 நகரங்களை தாக்கும் பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பசியோடு உணவுக்கு காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 25 பேர் பரிதாப பலி..!

70 வயது முதியவர் மேல் சாய்ந்த தவெக பேனர்! தொண்டர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் உத்தரவு!

புஷ்வானமான போர் நிறுத்தம்..? மீண்டும் இஸ்ரேலில் குண்டு மழை? - ஈரானுக்கு விடுத்த எச்சரிக்கை!

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு டெண்டர்.. இதுதான் திராவிட மாடல் அரசா? அன்புமணி கேள்வி

காந்த ஏற்றுமதியில் சீனா வைத்த ட்விஸ்ட்! இந்தியாவில் 21 ஆயிரம் வேலைகள் ஆபத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments