Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புல்வாமா தாக்குதல்: இந்தியர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் பெண்கள்

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (18:48 IST)
காஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் இருப்பதால் இந்தியா பாகிஸ்தனை தனிமைப்படுத்துவம், அந்நாட்டின் மீது பதில் தாக்குதல் நடத்தவும் காத்துக்கொண்டிருக்கிறது. அதோடு, பாகிஸ்தன மீது வணிகப்போரை துவங்கிவிட்டது.
 
இந்நிலையில், காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் நோக்கில், பாகிஸ்தானில் உள்ள இளம் பெண்கள் சமூக ஊடக பிரசாரத்தை துவங்கியுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள பெண் பத்திரிகையாளர் செஹிர் மிர்ஸா #AntiHateChallenge எனும் இந்த பிரசாரத்தை துவங்கியுள்ளார். நான் ஒரு பாகிஸ்தானி. நான் புல்வாமா தாக்குதலைக் கண்டிக்கிறேன், எனும் வாசகம் பொறிக்கப்பட்ட பதாகையை கையில் ஏந்தி ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 
அதோடு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் போர் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்று #AntiHateChallenge, #NotoWar, #WeStandWithIndia, #CondemnPulwamaAttack உள்ளிட்ட ஹேஸ்டேகுகளை பதிவிட்டு இந்தியர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 
 
இதை தொடர்ந்து பாகிஸ்தானில் மேலும் பல பெண்களும் இந்தியர்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

65 வயது எம்பியை மணந்த 51 வயது பெண் எம்பி.. ஜெர்மனியில் ரகசிய திருமணம்..!

RCB வெற்றி விழா குறித்து முன்பே எச்சரித்த போலீஸ்? கண்டுகொள்ளாத கர்நாடக அரசு? - அதிர்ச்சி தகவல்!

இது அவர்கள் குடும்ப விவகாரம், கருத்து சொல்ல விரும்பவில்லை: பாமக குறித்து திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments