Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா- பாகிஸ்தான் இடையே போகும் ஒரே ரயிலை நிறுத்தியது பாகிஸ்தான்

Webdunia
வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (19:27 IST)
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கும் தீர்மானத்தால் இந்தியாவோடு தீவிர முரண்பாட்டை காட்டி வருகிறது பாகிஸ்தான்.

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரை திரும்ப அனுப்பினார்கள். இதுகுறித்து மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியா கேட்டுக்கொண்ட நிலையில் அடுத்ததாக மற்றொரு தடையை விதித்திருக்கிறார்கள்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே செல்லும் ஒரேயொரு ரயில் சேவையான சம்ஜவுதா எக்ஸ்பிரஸை நிறுத்தியுள்ளது பாகிஸ்தான். 1976ம் ஆண்டு முதல் இந்தியாவின் அமிர்தசரஸிலிருந்து பாகிஸ்தான் லாகூர் வரைக்கும் பயணித்து வந்தது சம்ஜவுதா எக்ஸ்பிரஸ். பின்னாட்களில் காலிஸ்தான் அமைப்பின் அச்சுறுத்தலால் லாகூர் முதல் அட்டாரி வரை தூரம் குறைக்கப்பட்டது.

தினமும் இயக்கப்பட்டு வந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் தற்போது வாரம் இருமுறை மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் மசோதாவால் இந்த ரயிலை பாகிஸ்தானுக்குள் பயணிக்க அனுமதிப்பதில்லை என தடை விதித்துள்ளது தற்போது இந்த ரயில் வாகா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments