தண்ணீரில் வாத்துகளால் ஆக்சிஜன் அதிகரிக்கிறது; நெட்டிசன்களிடம் மாட்டிக்கொண்ட திரிபுரா முதல்வர்

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (16:37 IST)
வாத்துகள் தண்ணீரில் நிச்சல் அடிப்பதால்தான் ஆக்சிஜன் கூடுகிறது என்று திரிபுரா முதல்வர் கூறியதை சமூக வலைதளங்களில் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

 
பாஜகவை சேர்ந்த பிப்லப் குமார் தேப் சில மாதங்களுக்கு முன் திரிபுரா மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்றார். இவர் அவ்வப்போது ஏதாவது கூறி நெட்டிசன்களிடம் மாட்டிக்கொள்வது வழக்கம். 
 
மஹாபாரதம் காலத்திலேயே இணையதஅம் இருந்தது என்று அவர் கூறியது முதல் நாடு முழுவதும் அறியப்பட்டார். இவரது இந்த கருத்துக்கு பலரும் கேலியான தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதவிட்டது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பேசிய திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் கூறியதாவது:- 
 
ஏரியின் அருகில் வசிக்கும் மீனவர்களுக்கு 50 ஆயிரம் வாத்துகளை அரசு வழங்கும். வாத்துகள் ஏரியில் நீச்சல் அடிக்கும் போது தண்ணீரில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். இதனால், அங்குள்ள மீன்கள் அதிக ஆக்சிஜனை பெற முடியும். வேகமாக மீன்கள் வளரும். இது முழுக்க முழுக்க இயற்கை வழியிலேயே நடக்கின்றது என்று கூறினார்.
 
இதற்காக இவரை பலரும் கேலி செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments