Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு - இதுவரை 83 பேர் பலி!

Webdunia
திங்கள், 17 மே 2021 (09:20 IST)
கோவாவில் மீண்டும் ஆக்சிஜன் விநியோக அளவு குறைந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 8 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். 

 
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பலர் உயிரிழந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வரும் நிலையில் கோவாவிலும் அப்படியான துயர சம்பவம் நடந்துள்ளது.
 
கோவாவின் பனாஜியில் அமைந்துள்ள கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. ஏற்கனவே அங்கு கடந்த 4 நாட்களில் 74 கொரோனா நோயாளிகள்  உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை ஆக்சிஜன் விநியோக அளவு குறைந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 8 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அங்கு 83 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலச்சரிவு.. உயிருடன் புதைந்த 2 ஆயிரம் பேர்...!

பரமாத்மா அனுப்பியதாக பிரதமர் மோடி கூறியதற்கு அதானி தான் காரணம்: ராகுல் காந்தி

நைஜீரியா: கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் 160 பேரை கடத்திச் சென்றது யார்?

நாயாக வாழ்ந்தது போதும்.. கரடியாக மாறப் போகிறேன்! – ஜப்பான் அதிசய மனிதனின் அடுத்த ஆசை!

விளையாட்டு அரங்கத்தில் தீ விபத்து.! 4 ஆண்டாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்.? குஜராத் ஐகோர்ட் கேள்வி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments