Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்.. சமாஜ்வாதி கட்சி புறக்கணிப்பு..!

Siva
வியாழன், 5 டிசம்பர் 2024 (11:53 IST)
பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சியின் எம்பிக்கள் போராட்டம் நடத்திய நிலையில், இந்த போராட்டத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதி கட்சி புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சியின் எம்பிக்கள் அமல்களில் ஈடுபட்டு வருவதால் பாராளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த எம்பிக்கள் இன்று போராட்டம் நடத்தினர். அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் திமுக உள்பட இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

ஆனால் இந்த கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்தியா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களிடம் ராகுல் காந்தி பேசிய போது, பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபர் அதானி ஆகிய இருவரும் வெவ்வேறு நபர்கள் அல்ல; இருவரும் ஒன்றுதான். அதானியை மோடி விசாரணைக்கு உட்படுத்த மாட்டார், அவ்வாறு விசாரணை செய்தால் மோடி தன்னைத்தானே விசாரிப்பது போன்றது, என்று தெரிவித்தார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments