Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளை சந்திக்க சென்ற எம்.பிக்கள் தடுத்து நிறுத்தம்; ஆணிகளை அகற்றிய விவசாயிகள்!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (10:58 IST)
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக எம்.பிக்கள் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மேலும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க எல்லைப்பகுதிகளில் சாலையில் ஆணி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சந்திக்க தமிழக எம்.பிக்களான கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்டோர் மற்றும் பல எதிர்கட்சி எம்.பிக்கள் சென்ற நிலையில் அவர்கள் உத்தர பிரதேச – டெல்லி எல்லையான காஸியாபாத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதராவக எதிர்கட்சி எம்.பிக்கல் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் எல்லையில் அமைக்கப்பட்ட ஆணிப்பலகைகள் விவசாயிகள் உடைத்து வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments