Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காய ஊழல்: ஆம் ஆத்மி அரசு மீது அவதூறு பரப்பப்படுகிறது.

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2015 (08:27 IST)
வெங்காய விலை நிர்ணயத்தில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை டெல்லி மாநில துணை முதல் அமைச்சர் மனீஷ் சிசோடியா மறத்துள்ளார்.

 
எகிறி வரும் வெங்காய விலையை குறைப்பதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தலைநகர் டெல்லியில் 1 கிலோ வெங்காயம் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெங்காய விலை நிர்ணயத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்தது.
 
இது குறித்து அம்மாநில துணை முதல் அமைச்சர் மனீஷ் சிசோடியா கூறுகையில், "இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை நிறுவனத்திடம் இருந்தும் விவசாயிகளிடம் இருந்தும்  ஒரு கிலோ வெங்காயம்  32 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது" என்றார்.


 
 
"போக்குவரத்து செலவினங்களை கருத்தில் கொண்டு ஒரு கிலோ வெங்காயம் 40 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில் ஒரு கிலோ வெங்காயத்துக்கு அரசு 10 ரூபாய் மானியம் வழங்கி வருகிறது". என்று தெரிவித்தார்.
 
இதனால் தற்போது ஒரு கிலோ வெங்காயம்  30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் எவ்வித ஊழலும் நடைபெறவில்லை. ஆம் ஆத்மி அரசு மீது திட்டமிட்டே அவதூறு பரப்பப்பட்டு வருகிறது"என்று மனீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டினார்.

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

Show comments