Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 லிட்டர் பால் விலை ரூ.210: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (10:29 IST)
பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பால் 210 ரூபாய்க்கு விற்பனை ஆவதை அடுத்து அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
பாகிஸ்தானில் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக நெருக்கடியில் உள்ளது என்பதும் இலங்கை போல் பாகிஸ்தானும் விரைவில் திவால் ஆகும் என்றும் கூறப்படுகிறது. 
 
அமெரிக்கா மற்றும் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு கடன் கொடுப்பதை நிறுத்தி விட்டதால் பாகிஸ்தான் நாடு பெரும் திட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் பொருளாதார சிக்கல் காரணமாக பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் ஒரு லிட்டர் பால் ரூபாய் 210 என்றும் ஒரு கிலோ சிக்கன் 650 முதல் 750 வரை விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. 
 
கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் ஆயிரத்து 700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இருபது லட்சம் பேர் வீடுகளை இழந்து உள்ளதாகவும் பொருளாதார நெருக்கடி இயற்கை பேரிடர் உள்ளிட்டவை காரணமாக பாகிஸ்தானில் விலைவாசி விண்ணை முட்டியுள்ளதால் அந்நாட்டு மக்கள் பரிதாபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நேர கட்டுப்பாடு.! காலை 9.15-க்குள் வராவிட்டால் என்னவாகும் தெரியுமா.?

பஞ்சாப் எல்லையில் பறந்த மர்ம ட்ரோன்.. சீனாவை சேர்ந்ததா?

குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது சினிமா டைட்டிலில் மட்டும் தான்: ராமராஜன் கண்டனம்..!

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு.! திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments