Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி - கேரளாவில் ஓணம் பண்டிகை ரத்து

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (13:22 IST)
கேரளாவில் கனமழை பெய்து வருவதனால் இந்த மாதம் 25 ஆம் தேதி நடைபெற இருந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.
கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருவதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது. 
 
பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்தும், பல வீடுகள் வெள்ளத்திலும் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
 
இந்நிலையில் கனமழை காரணமாக கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழாவான ஓணம் பண்டிகையை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments